tamilnadu

img

இமாச்சல் பிரதேசம்: ஒரே வாரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்

இமாச்சல் பிரதேசத்தில் ஒரே வாரத்தில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 
இமாச்சல்பிரதேசத்தின் லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
லஹால் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில்  வடகிழக்கில் 20 கி.மீ. ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது.  லஹால் மற்றும் ஸ்பிட்டியை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் உள் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த 23ந்தேதி மற்றும் 25ந்தேதிகளில் கின்னார் மற்றும் சம்பா ஆகிய மாவட்டங்களில் முறையே 3.3 மற்றும் 4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஒரு வாரத்தில் இன்று 3வது முறையாக இமாசல பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளிவரவில்லை.

;